வணக்கம் .
மனதிற்கு இனிய நிகழ்வுகள் பல நிகழ்வுகள் நடந்தன எனக்குள்ளும் என் வீட்டிலும் , உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்வு.
யாதும் ஊரே ! யாவரும் கேளீர் என்ற பழமொழியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. என்ன பழமொழி இது ? இதன் தாத்பரியம் என்ன ? என்று சிந்தையில் பெருக்கெடுத்தது எண்ணங்கள் பல ! , இந்த உலகில் உள்ள எல்லா நாடும் , அதில் உள்ள எல்லா ஊரும் நமதே ! கேட்க யாரும் இருக்க மாட்டார் , அகிலமனைத்தும் நமக்கே சொந்தம் , எல்லோரும் நம் உறவுகள் என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உரைத்த பன்மொழி இது
அகன்று விரிந்த இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற மொழிகள் எண்ணற்ற நாடுகள் எண்ணில் அடங்கா மதங்கள் என பல உள்ளன .மனிதனின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் தன்னை நெறி படுத்த மதங்களை உருவாக்கினான் .
அதில் அன்பை மட்டுமே பிரதானமாக வைத்தான் .
நல்ல வேலை அன்பிற்கு பஞ்சம் வைக்காமல் இன்னும் சில இடங்களில் அன்பு எனும் அகல் விளக்கு ஒளிரவே செய்கிறது .,முன் ஒரு காலத்தில் இப்பொழுது இருக்கும் நவீன தொடர்புகள் அற்ற பொழுதில் அன்பு செழித்திருந்தது . அப்போதும் போட்டி , பொறாமை , காழ்ப்புணர்ச்சி , வர்ண வேறுபாடுகள் என பிரிந்திருந்தாலும் அங்கே எதிர்பார்பற்ற அன்பு இருந்தது ,
பசியோடு இருப்போர்க்கு அன்ன சாத்திரங்களும் , நோயுற்றோர்க்கு ஆதுர சாலைகளும் என மக்களை நேசிக்கும் அரசு இயங்கியது. இப்படிப்பட்ட அன்பை தேடிய பயணம் இது .............
உண்மையில் அன்பு என்பது எது ? எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அக்கறை என்று எடுத்துக்கொள்ளலாமா ..? அக்கறை காட்டினால் அன்பு ஆகுமா? இல்லை எனில் எது அன்பு ? ஆதி மனிதன் கூட்டமாய் வாழ்ந்தபோது , அக்கறையாய் வாழ்ந்திருப்பான் .அங்கு தலைவன் தன் சொந்தங்களுக்காக அக்கறையாக வேட்டையாடி உணவை பகிர்ந்திருப்பான் ..எனில் துன்பம் எப்படி வந்தது , மனக்கசப்பு எப்படி உருவானது ? மனிதனின் அனுபவம் வளர வளர நல்லவை தீயவைகளை பகுத்து ஆராயும் பக்குவம் வந்தது , கவலைகளும் , துன்பங்களும் தாக்கிய பிறகு, மன நிம்மதியை நாடினான் .,
இங்கு நிம்மதியை தீர்க்க , கடவுள் எப்படி தோன்றினார் ,அவர் எப்படி தோன்றார்கள் ? என்று நிறைய பேசுவோம் காத்திருங்கள் .....!!
No comments:
Post a Comment