Thursday, July 20, 2017

தகடூர்

மிக பெரிய புண்ணிய பூமியாம்  இந்த தமிழகத்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் . மும்முடி சோழனும் , பாண்டிய சேர நாட்டவரும் பேணி வளர்த்த இன்தமிழகம் , முன்பெல்லாம் பலதரப்பட்ட தாக்குதல்களையும் , சோதனைகளையும் கண்டுள்ளது,

பல மதங்கள்  பல கலாச்சாரங்கள் , பலவித சடங்குகள் , வாழ்வியல் நெறிகள் என ஏராளமாக இருந்தன , இருப்பினும்
இந்நாடுகள் மொழிபற்றில் ஒன்றாகவே இருந்தன, சேர சோழ பாண்டிய மண்டலங்களுக்குள் உரிமை போராட்டங்கள் நிரம்ப இருப்பினும் அமுத மொழியாம் செந்தமிழை விட வில்லை
முத்தமிழ் வளர்த்த மூவேந்தர்களுக்கு நன்றி செலுத்துவோமாக ..
இந்த பேரரசுகளின் கீழ் கப்பம் செலுத்தி சிற்றரசுகளாக பல தேசங்கள் இருந்தன , அவர்களில் முதன்மையானவர்கள் கடையெழு மன்னர்கள்
பாரி , பேகன் , காரி , ஆய் , அதியன் , நள்ளி  , ஓரி, என்ற மாபெரும் குணவன்கள் மன்னர்களாக இருந்தனர்

பேகன் மயிலுக்கு வழங்கிய போர்வையும் , பாரி முல்லைக்கு கொடுத்த தேறும் , காரி புலவர்க்கு தானம் தந்த நாடும் , அவ்வைக்கு அதியன் தந்த நெல்லிக்கனியும் , நீதி வேண்டி வருவோர்க்கு நீதி தந்த நள்ளியும், கூத்தாடுவோர்க்கு வீடு தந்த ஓரியும்  என அவர்தம் புகழ் உலகெலாம் பரவியது

இவர்களில் என்னை கவர்ந்தவர் என் மண்ணின் மாணிக்கம் அதியன் .


சேரர் கிளை வந்தாலும் , சிறிய நாட்டில் எளிய எழினியாக பிறந்து ,தம் கொடை திறத்தால்  அதியமான் நெடுமான் அஞ்சியாக உயர்ந்த வேங்கை இவன் , இவரின் புகழ் பற்றி தகடூர் யாத்திரையில் அரிசில் கிழார் மிக அழகாக விவரிக்கிறார் ,
     இத்தனைக்கும் அரிசில் கிழார் , அதியமானின் அமைச்சரோ , அவை புலவரே அல்ல , அதியனின் எதிரி சேர மன்னரின் தலைமை அமைச்சர் , நற்றமிழ் புலவர் , தகடூர் போரில் நேரில் கண்டவற்றை தகடூர் யாத்திரை ஆக்கி அதியனின் புகழை தரணி எங்கும் பரவ செய்தவர் , அதியமான் நெடுமான் அஞ்சியின் அஞ்சா நெஞ்சம் கொண்டு அஞ்சி நடுங்கினர் பகையோர் ...

   , வள்ளல்கள் எழுவரின் தர்மத்தில் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருந்தது , அதில் முக்கியமானவர் திருக்கோவிலூர் மலையமான் திருக்காரி
ஆழ்ந்த சிவநேசனான மலையமான் காரி , தன் மக்களை பண்புடன் பேணி காத்தான் , அவரின் பெருமையும் புகழும் அவருக்கு  ஆணவம் தந்தது

ஒருபுறம் அதியனின் புகழ் மெல்ல மெல்ல தகடூர் தாண்டி திருக்கோவிலூர் மன்னனின் செவியை அடைந்தது ,எங்கு திரும்பினும் அதியனின் புகழ் , அப்பழுக்கில்லாத வீரமும்  , தானமும் , தவமும் , கல்வியும் என அனைத்தும்
மலையமான் காரியின் சினத்தை சீண்டியது

விளைவு தகடூரை நோக்கி போரை துவங்கினான் ,தினவெடுத்த தோள்களுடன்
காளையாக பாய்ந்து வரும் அதியனின் வீரத்திற்கு முன் தோற்று அடிபட்ட வேங்கையாக திரும்பினான்

எப்போதுமே அவமான பட்ட மனித மனம் மிக கொடுமையானது , அது எப்போதுமே பழிவாங்க காத்திருக்கும் மலையமான் அத்தியமானிற்கு எதிரிகளை எல்லாம் ஒன்று திரட்டி மீண்டும் போரில் குதித்தான் , இம்முறை தனியனாய் அல்ல , பலம் பொருந்திய சேர சோழ பாண்டிய பேரரசுகள் உதவின, அதனுடன் தொண்டை மண்டலமும் சேர்ந்து அதியனை போருக்கு அழைத்தன

சாதாரணமாகவே வேட்டைக்கு செல்லும் வேங்கை வலிய போருக்கு அழைப்பின் மறுப்பனோ , சமுத்திரம் மோதுவதை போல படைகள் மோதின , தகடூர் வீரர்களின் திறனை சாதாரணமாக எடை போட்ட அப்படைகள் பின்வாங்கின , தத்தம் படைகள் பின்வாங்குவதை கண்ட பேரரசுகள் மீண்டும் பெருமளவில் படைகளை அனுப்பின

இப்படியாக அதியமான் கோட்டையின் மீது சுமார் ஒரு வருடம் முற்றுகை நடைபெற்றது , கோட்டையின் உறுதியும் வீரர்களின் பெருவீரமும் பகைவர் முன் மண்டியிடாமல் நாட்டை காப்பாற்றியது . அதியமான் நெடுமனின் மாபெரும் இரட்டை படை தலைவர்களான பெரும் பாக்கணும் சிறும்பாக்கணும் எதிர்களின் படைகளை சிதறடித்தனர் .

தளபதிகளின் தாக்குதலுக்கே தடுமாறிய படைகள் , கோட்டையை உடைக்க அரும்பாடு பட்டன , அதியமான் கோட்டையின் பெரிய அகழியும் ,அதில் வாய்பிளந்த படி காத்திருக்கும் முதலைகளும் , ஆயிரம் பேர் தாக்கினாலும் உடைக்க முடியா கதவும் என அதை கடக்க முயல்வது கனவில் நடவா காரியம், தொடர் தோல்வியால் துவண்ட எதிரி படைகள் சூளிச்சியை கையாண்டன

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது நாட்டை காக்கும் ராணுவத்திற்கு மட்டும் அல்ல , ஒவொரு குடிமகனுக்கும் உண்டு , எல்லா தேசத்திலும் எக்காலத்திலும் பணத்திற்கு விலை போகும் மடையர்கள் உள்ளனர் , கோட்டையின் ரகசிய வழிகளை அறிய பல தரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ள பட்டன , அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர் ,

பொற்காசுகளுக்கு மயங்கி தகடூரின் மக்களின் சிலர் சுரங்க வழிகளை காட்டி கொடுத்தனர் , அதன் வழியாக கோட்டைக்குள் பிரவேசித்த படைகள் தகடூரின் படைகள் மீது சரமாரியாக மோதினர்

சேர மன்னன் இரும்பொறை தகடூர் வீரர்களை கொன்று குவித்தான் , தனி ஒருவனாக அதியமான் நெடுமான் அஞ்சி ஆயிரமாயிரம் வீரர்களை கொன்று குவித்தான் .

வீரத்தால் வெல்ல முடியாத அதியமானை சூழ்ச்சியில் வென்றனர் ,இறுதியில் பார் போற்றும் மன்னன் அதியமான் , சேர மன்னன் இரும்பொறை வாள் வீச்சுக்கு இரையானான் , மார்பிலே குருதி பொங்க மண்ணில் வீழ்ந்தான் ,

வீழ்ந்தது அதியன் மட்டும் அல்ல தமிழும் தான்,

ஓடோடி வந்து செந்தமிழால் கதறினாள் அவ்வை .

வீர மரணம் கொண்ட அதியமானும் ஈம சடங்குகளை செய்தான்
சேரன் இரும்பொறை ,அவனும் கண்ணீர் சிந்தினான் , அவன் பேரரசன் ஆயினும் அதியனின் வீரத்தால்  ஈர்க்க பட்டான்

பின் தகடூரை இரும்பொறை சிறப்பாகவே ஆட்சி செய்தான் , இருப்பினும்
அதியனின் புகழ் மறையுமோ , அவர் தம் வீரம் மறையுமோ , மறையாது

வாழ்க அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழ்
வாழ்க
வாழ்க
வாழ்க

                             இவன்
                                                 ந வா பிரபு ....

அடுத்து ..................

 தோல்வியை துவம்சம் செய் ................!


No comments:

Post a Comment

மீண்டும் நான்

எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.  இந்த தளத்திற்கு வந்து வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு போலவே இருப்பதில்லை பல சூழல்கள் எல்லாம் நம்மை ஆட்டுவ...